Friday, September 23, 2011

சீ சீ இந்தப்பழம் புளிக்கும்!!

கடந்த சில பதிப்புகளில் நான் காதலை மையமாக்கி இரண்டு கவிதைகள் எழுதியிருந்தேன்.

காதலின் ஆழமும் அதன் பாதிப்பும் அழகாக பிரதிபலிக்கிறது என்றும் அதனால் எனக்கு நிஜ வாழ்க்கை அனுபவம் நிறைய இருக்கிறது என்றும் நண்பர்கள் மின்னஞ்சல் மூலம் அவர்களது கருத்தை சொல்லி இருந்தார்கள்.
ஆனால், அதில் பாதி உண்மை. ஆமாம். அனுபவம் இருக்கிறது. அதற்காக காதலித்த அனுபவம் என்று அர்த்தமில்லை.
கண்முன்னே பல காதல் கைகூடியதையும் சில காதல் உடைந்து வருந்தியதையும் கண்ட அனுபவம் போதும் இது போல கவிதை படைப்பதற்கு.
காதல் மேல் எனக்கு ஒரு பயம் கலந்த மரியாதை இருக்கிறது!
(கணக்கு வராது என்பதால் எனக்கு கணக்கு வாத்தியார் மீது இருப்பதுபோல!!)

உண்மைக்காதல், உயிர்க்காதல் என்றெல்லாம் உரைக்கும் அன்பர்கள் ,
உண்மையாகவும், உயிருக்கு மேலாகவும் நினைப்பதற்கு பெயர்தான் காதல் என்பதை உணர வேண்டும்.

"காதல் இல்லையேல் சாதல்" என்ற பாரதியின் வரிகளை கொஞ்சம் நினைத்துப் பார்க்கிறேன்.
இத்தனை ஆண்டு காலம் பார்த்த காதல் திரைப்படங்களை கண்முன் நிறுத்துகிறேன்.
சோக கீதங்களைக் கேட்டு கண்ணீர் சிந்துகிறேன்.

'வேண்டவே வேண்டாம் இந்த வலிகள் நமக்கு!!' என்ற அந்த பயம்,மரணபயத்தை விட கொடுமையானதாக எனக்கு
அன்று தோன்றியது.

இனிவரும் காதல் படைப்புகள் முழுக்க முழுக்க கற்பனையோ அன்றி அதற்கும் என் நிஜ வாழ்க்கைக்கும் சம்பந்தம் இல்லை என அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.

ஆக,என்னைப் பற்றிய அந்த வீரதீர எண்ணங்கள் இனி யார்க்கும் வராது என நம்புகிறேன். !!

ஆகவே, காதலிப்பவர்களை வணங்கி, காதலில் விழாதவர்களை வாழ்த்தி, சேர்ந்தோரை ஆசிர்வதித்து, பிரிந்தோரை ஆறுதல்கூறி,விடைபெறுகிறேன்,
நன்றி வணக்கம்!!

1 comment:

  1. Really nice thought... if you give permission means i will dedicated its to all our YOUTHS!

    ReplyDelete

படித்த அடையாளத் தடத்தை இங்கே விட்டுச் செல்லுங்கள் - அன்புடன் ராஜ்குமார்